Oct 15, 2018, 12:16 PM IST
அரியானாவில் 3 வயது சிறுவன் ஒருவன் 10 அடி நீளமுள்ள சாரைப் பாம்புகளுடன் விளையாடும் காட்சி பார்போரை வியப்படைய செய்துள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற என்பார்கள். ஆனால் சிறுவன் பாம்புடன் சாகசங்கள் செய்து கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறான்.
அரியானாவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது வீட்டில் சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு போன்ற பாம்புகளை காப்பாற்றி வளர்த்து வருகிறார். ஆனால் அந்தப் பாம்புகளை அவரது 3 வயது மகன் பொம்மைபோல் நினைத்து சகஜமாக விளையாடி வருகின்றான். இந்த சிறுவனின் செயல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.