எருமை மாடுகளை கடத்தியதாக இஸ்லாமியர்கள் அடித்து கொலை!! எங்கு நடந்தது இந்த கொடூர சம்பவம்..?

First Published Jun 14, 2018, 1:00 PM IST
Highlights
2 muslims murdered in the name of stealing buffalos


ஜார்கண்ட் மாநிலத்தில் விற்பனைக்காக எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற இரண்டு இஸ்லாமியர்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர், கொடூரமான தாக்குதல்களை நடத்துவதும் வன்முறையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

ஜார்கண்ட் மாநிலம் குட்டா மாவட்டத்தில் சிராபுதின் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இருவரும் 13 எருமை மாடுகளை ஏற்றிச்சென்றுள்ளனர். பன்னட்டி என்ற கிராமம் அருகே சென்றபோது, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அந்த வாகனத்தை இடைமறித்த சிலர், அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

இரண்டு பேரையும் கயிற்றில் கட்டி இரக்கமற்ற முறையில் சாலையில் தரதரவென இழுத்து சென்று அடித்துள்ளனர். கடுமையாக தாக்கப்பட்டதில் சிராபுதீன் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். எருமை மாடு வாங்கி சென்ற இருவரை பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில வெறியர்கள் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொடூர கொலை தொடர்பாக 4 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 
 

click me!