இன்று உலக கொசு ஒழிப்பு நாள்!!! 1987-ல் நடந்த இந்த விஷயம்தான் இந்நாள் உருவாக காரணம்...தெரிஞ்சுக்க வாசிங்க...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 20, 2018, 1:59 PM IST
Highlights

உலகிலேயே மொத்தமாக மூன்று விதமான கொசுக்கள் மட்டும்தான் மிகக் கொடிய நோய்களை பரப்புகின்றன. 

உங்களுக்குத் தெரியுமா? 

உலகிலேயே மொத்தமாக மூன்று விதமான கொசுக்கள் மட்டும்தான் மிகக் கொடிய நோய்களை பரப்புகின்றன. அவை: மலேரியாவைப் பரப்பும் 'அனோபிலஸ்' கொசு, டெங்கு மற்றும் சிக்கன் குனியாவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு மற்றும் யானைக்கால் நோயைப் பரப்பும் கியூலக்ஸ் கொசு. 

உலக கொசு ஒழிப்பு தினம் எப்படி வந்தது?

கடந்த 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி சர் ரெனால்ட் ரோஸ் என்ற விஞ்ஞானி பெண் கொசுக்கள் மனிதனின் இரத்தத்தைக் குடித்து மலேரியாவைப் பரப்புகிறது என்றும் ஜே.இ. (ஜப்பான் என்சப்பாலிட்டிஸ்)  என்ற கொசு ஜப்பானிய மூளைக் காய்ச்சலைப் பரப்புகிறது என்று கண்டறிந்தார். அவர் கண்டுபிடித்த நாளே வருடா வருடம் உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சந்தேகம் உங்களுக்கு வந்துச்சா? 

பெண் கொசுக்கள் இரத்தம் குடிக்கும் என்றால் ஆண் கொசுக்கள் என்ன பண்ணும் தெரியுமா? ஆண் கொசுக்கள் மலர்களில் இருந்து தனது உணவைப் பெற்றுக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.

யானைக்கால் வியாதிக்கு மருந்து இருக்கிறதா?

யானைக்கால் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கடற்கரைப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கியூலெக்ஸ் கொசுக்களால் ‘பைலேரியா’ எனப்படும் யானைக்கால் வியாதி உருவாகிறது. இவ்வகைக் கொசுக்கள் இரவில்தான் கடிக்கும். இவை சாக்கடை, வயல்வெளி போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யும்.

click me!