kerala chicken curry திருவனந்தபுரம் ஸ்பெஷல் வறுத்த மசாலா சிக்கன் கறி ரெபிசி

Published : May 20, 2025, 06:16 PM IST
kerala chicken curry

சுருக்கம்

கேரளாவில் செய்யப்படும் அசைவ உணவுகளுக்கு எப்போதும் தனி சுவை உண்டு. இதில் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்யும் சிக்கன் கறி அல்டிமேட்டாக இருக்கும். தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா என அனைத்து வகையான உணவிற்கும் செமையாக பொருந்தக் கூடியதாக இருக்கும்.

திருவனந்தபுரம் அதன் தனித்துவமான உணவு வகைகளுக்கும் பிரபலமானது. அவற்றில் மிகவும் விரும்பப்படும் ஒன்று திருவனந்தபுரம் ஸ்பெஷல் சிக்கன் கறி. இந்த கறி, நறுமணமிக்க மசாலாக்கள் மற்றும் தேங்காய் பாலின் செழுமையுடன் தயாரிக்கப்படுகிறது, இது ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

வெங்காயம் - 2 பெரியது

தக்காளி - 2 நடுத்தர அளவு

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 6-8 பற்கள்

பச்சை மிளகாய் - 2-3

கறிவேப்பிலை - 2 கொத்து

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1-2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1 கப்

தேங்காய் எண்ணெய் - 2-3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி தழை - தேவையான அளவு

அரைக்க வேண்டிய மசாலாக்கள்:

வர மிளகாய் - 4-5

சின்ன வெங்காயம் - 5-6

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/4 தேக்கரண்டி

பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 2-3

ஏலக்காய் - 1

செய்முறை:

முதலில், அரைக்க வேண்டிய மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அவை மென்மையாகும் வரை வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கி அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், இத்துடன் ஊறவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த நிலையில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, மிதமான தீயில் 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும். கறி கெட்டியாகும் வரை அவ்வப்போது கிளறி விடவும், கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.

சுவையான திருவனந்தபுரம் ஸ்பெஷல் சிக்கன் கறி தயார் இதை சாதம், சப்பாத்தி, பரோட்டா அல்லது உங்களுக்கு பிடித்த உணவு வகைகளுடன் பரிமாறலாம்.

சிறப்பு குறிப்புகள்:

இந்த கறியின் தனித்துவமான சுவைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது முக்கியம்.

முதல் தேங்காய் பால் சேர்ப்பது கறிக்கு நல்ல கெட்டியான அமைப்பையும், rich ஆன சுவையையும் கொடுக்கும்.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரத்தை கூட்டவோ குறைக்கவோ மிளகாய் தூளின் அளவை மாற்றலாம்.

சின்ன வெங்காயம் சேர்ப்பது கறிக்கு ஒரு இனிப்பான சுவையை கொடுக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!