Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போன வழக்கில் ஜனனி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தான் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பதாக ஈஸ்வரி போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் தர்ஷினிக்கு என்ன ஆச்சு என்பதே தெரியாமல் ஜனனி திண்டாடி வருகிறார். இந்த விவகாரத்தில் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் போலீஸ் கண்டிஷன் போட்டுள்ளதால் ஜனனி, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இந்த நேரத்தில் சாருபாலா போன் பண்ணி ஜனனியிடம் வழக்கு விசாரணைக்கு வருவது பற்றி பேசுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜனனி தற்போது வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டிய சூழல் உள்ளதால், அவர் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியதிருக்கும். ஆனால் தற்போது அவர் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதோடு, நாளை அவரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளதால், அநேகமாக நாளை வரை தர்ஷினி கிடைக்காவிடில், ஜனனியை போலீசார் கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ஜனனி கைதானால் அவரால் ஆதி குணசேகரனுக்கு எதிரான வழக்கில் ஆஜர் ஆகமுடியாமல் போகும். அப்படி நடந்தால் குணசேகரன் ஈஸியாக வழக்கில் இருந்து வெளிவந்துவிடுவார்.
ஆனால் ராவணன் அப்படியெல்லாம் நடக்கவிடமாட்டார். ஏனெனில் ஆதி குணசேகரனை பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கும் அவர், அந்த வழக்கு விசாரணையில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை கொடுக்க உள்ளார். அது என்னவென்றால், இத்தனை நாட்களாக காணாமல் போய் இருந்த தர்ஷினியை, வழக்கு விசாரணையின் போது அவர் வெளியே விட வாய்ப்பு உள்ளது. தர்ஷினி கோர்ட்டுக்கு வந்தால் நிச்சயம் ஆதி குணசேகரனுக்கு எதிராக தான் சாட்சி சொல்வார். ஜனனிக்கு பதிலாக கோர்ட்டில் தர்ஷினி சம்பவம் பண்ண வாய்ப்புகள் அதிகம்.
தர்ஷினி கிடைத்ததும் ஜனனி மீதுள்ள வழக்கு செல்லாக்காசு ஆகிவிடும். அதனால் அவரை போலீஸ் விடுவித்துவிடும். ஆனால் ஆதி குணசேகரன் மட்டும் சிக்கினால் அவருக்கு ஆயிசு முழுக்க சிறை தான். ஏனெனில் அம்புட்டு கொலைகளை செய்திருக்கிறார். குறிப்பாக இராவணனின் தாயை கொன்றது அவர் தான். அதுமட்டுமின்றி இராவணன் அம்மாவுக்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் அபேஸ் பண்ணி வைத்துக் கொண்டு, அதை தானே சொந்தமாக வேர்வை சிந்தி உழைத்து சம்பாதித்ததாக அடிக்கடி பில்டப் விட்டுக் கொள்வார் குணசேகரன்.
தர்ஷினி இராவணனால் கடத்தப்பட்டு உள்ளது ஆடியன்ஸுக்கு தெரிந்தாலும் அது ஜனனிக்கு இதுவரை தெரியாது. அதனால் தன் மீது பழிவிழாமல் இருக்க, இராவணன், தர்ஷினியை லவ் டிராக்கில் மாட்டிவிட்டுள்ளார். இப்படி பல்வேறு ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அடுத்து என்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.