சமீபத்தில், ஏர்டெல்லின் 'டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்' பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் ஒன்று X (முன்பு ட்விட்டர்) தளத்தில் வைரலானது. அதில், 'அன்லிமிடெட் 5G டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் ஷேர் செய்ய முடியாது' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விதிமுறை அமலுக்கு வந்தால், நீங்கள் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும்போது, உங்கள் தினசரி 4G டேட்டா பேக்கில் இருந்துதான் டேட்டா கழிக்கப்படும்; அன்லிமிடெட் 5G டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. ஆனாலும், ஏர்டெல் நிறுவனம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லுக்கு இது எப்படித் தெரியும்?
டேட்டா போனில் நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற டிவைஸ்களுக்கு ஷேர் செய்யப்படுகிறதா என்பது டெலிகாம் கம்பெனிக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி டெலிகாம் நிறுவனங்களால் நெட்வொர்க் அளவில் டேட்டா டிராஃபிக்கை எளிதாகக் கண்காணிக்க முடியும்.
இதற்காக, TTL (டைம் டு லிவ்), TCP/IP ஃபிங்கர்பிரிண்டிங், HTTP யூஸர்-ஏஜென்ட் மற்றும் டீப் பேக்கெட் இன்ஸ்பெக்ஷன் (DPI) போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டெக்னாலஜி மூலம், டேட்டா எந்த டிவைஸில் இருந்து வருகிறது, அதன் தன்மை என்ன என்பதை அவர்களால் கண்டறிய முடியும்.