அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டும் பயன்படுத்தவும்: உங்களுக்கு e-PAN கார்டு தேவைப்பட்டால், மின்னஞ்சலில் வரும் லிங்குகளைக் கிளிக் செய்யாமல், வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in அல்லது NSDL/UTIITSL ஆகிய அங்கீகரிக்கப்பட்ட போர்ட்டல்களுக்கு நேரடியாகச் சென்று மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அனுப்புநரின் முகவரியைச் சரிபார்க்கவும்: உங்களுக்கு வரும் மின்னஞ்சல் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ டொமைனான @incometax.gov.in என்ற முகவரியிலிருந்து வருகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். பொதுவான அல்லது சந்தேகத்திற்குரிய ஜிமெயில் (Gmail) அல்லது பிற தனிப்பார்வை முகவரிகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களை உடனே நிராகரியுங்கள்.
ரகசிய எண்களைப் பகிர வேண்டாம்: பான் கார்டு விவரங்கள் மட்டுமின்றி, உங்கள் வங்கி கணக்கு எண், கிரெடிட்/டெபிட் கார்டு எண்கள், சிவிவி (CVV) மற்றும் ஓடிபி (OTP) போன்ற எந்தவொரு ரகசியத் தகவல்களையும் யாருடனும் பகிரக் கூடாது.
புகார் அளிப்பது எப்படி?: இது போன்ற ஆன்லைன் நிதி மோசடி அல்லது போலி மின்னஞ்சல்களால் நீங்கள் ஏமாற்றப்பட்டாலோ அல்லது சந்தேகம் எழுந்தாலோ, உடனடியாக மத்திய அரசின் தேசிய சைபர் குற்றப் பிரிவு இணையதளத்திலோ (cybercrime.gov.in) அல்லது 1930 என்ற உதவி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.