Magalir Urimai Thogai: ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை?

Published : Nov 14, 2024, 07:55 AM ISTUpdated : Nov 14, 2024, 08:17 AM IST

வருகின்ற ஜனவரி மாதம் முதல் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேசுவது போன்ற வீடியோ வைரலான நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

PREV
15
Magalir Urimai Thogai: ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை?
magalir urimai thogai

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தெரிவித்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்ற உத்திரவாதம் அக்கட்சிக்கு பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி இத்திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. முன்னதாக இத்திட்டத்தின் கீழ் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது.

25
magalir urimai thogai

தற்போது இதன் பயனாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு 1.62 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் குடும்ப வருமானம், குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.குபு8நு4-ஸ்ரீ0ீ

35
Magalir Urimai Thogai

இத்திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நாட்டில் எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றாலும் ஏதேனும் ஒரு கட்சியாவது மகளிருக்கு ரூ.1000, ரூ.2000 வழங்குவோம் என வாக்குறுதி அளித்து வருகின்றன. குறிப்பாக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இத்திட்டத்தை வேறு மாநிலங்களில் தங்கள் வெற்றிக்கான வாக்குறுதியாக அளித்து வருகின்றன.

45
magalir urimai thogai

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரூ.20 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, ரூ.14 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது சில பெண்களுக்கு விடுபட்டுள்ளது. அவர்களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் முதல் இத்தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆனால் அவர் பேசிய கருத்துகள், “வருகின்ற ஜனவரி மாதம் முதல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வருகின்ற ஜனவரி மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது போல் புரிந்து கொள்ளப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

55

அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். 

மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories