தெலுங்கு தேச கட்சியோடு கூட்டணி
அந்தத் தேர்தலில் ஜனசேனாவுக்கு 6 சதவீத வாக்குகளை பெற்றது. இதனையடுத்து தான் 2024ஆம் ஆண்டு தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் ஜனசேனாவும், தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து மீண்டும் ஜெகன் ஆட்சிக்கு வரும் நிலை உருவாகும் என கணிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசுக்கு எதிரான வாக்குகளை பிரிக்க மாட்டேன் என பவன் கல்யாண் கூறினார். ஆந்திராவில் ஜனசேனாவும், தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.