15.8 லட்சம் பேர் எழுதிய தேர்வு
அதன்படி இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். அரசு பணியாளர் தேர்வு எழுதி பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் படி 3மாத காலத்திற்குள் அதாவது குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.