விஜய் பிரம்மாண்ட அரசியல் மாநாடு
நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாட்டில் பல லட்சம் மக்கள் திரண்டனர். மக்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கை, கூட்டணி என அதிரடியாக அறிவித்தார். குறிப்பாக 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாகவும், தனி மெஜாரிட்டி கிடைக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எங்களை நம்பி கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும் அரசியலில் கோபத்தோடு, ஆக்ரஷத்தோடு பேச வேண்டியதில்லையெனவும் கூறினார். மேலும் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்த்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து என தெரிவித்தார்.இதனால் விஜய்யோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டிய திட்டமிட்ட சீமானுக்கு அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.