கூடுதல் மாநகர பேருந்துகள்
மேலும் கடந்த ஆண்டு 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 3 இடங்களில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 3 பேருந்து நிலையங்களுக்கு செல்ல பொதுமக்கள் வசதிக்காக மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
31.10.2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 28.10.2024 முதல் 30.10.2024 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.