இபிஎஸ் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட விஜய்..! ஒரே வார்த்தையில் மொத்தமாக முடிச்சு விட்ட தவெக!

Published : Oct 29, 2025, 03:42 PM IST

TVK Rejects Alliance Talk, Stuns EPS & AIADMK: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, தவெக கூட்டணி என பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து முதன்முறையாக தவெக விளக்கம் அளித்துள்ளது. இது அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

PREV
14
கரூர் தவெக கூட்ட நெரிசல்

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் ஏற்படட் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜியின் சதியும், காவல்துறையினர் அலட்சியமே காரணம் என தவெக குற்றம்சாட்டியது. மறுபக்கம் விஜய் தாமதமாக வந்ததும், காவல்துறை பேச்சை தவெக தலைவர்கள் கேட்காததே விபத்துக்கு காரணம் என திமுக குற்றம்சாட்டியது.

24
விஜய்க்கு ஆதரவாக நின்ற இபிஎஸ்

மேலும் திமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி இந்த விவகாரத்தில் விஜய்யை குற்றம்சாட்டிய நிலையில், அதிமுகவும், பாஜகவும் ஆதரவாக நின்றது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் விவகாரத்தில் விஜய் பக்கம் நின்று திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் தவெக தொண்டர்கள் இபிஎஸ்ஸை புகழ்ந்து தள்ள ஆரம்பித்தனர்.

அதிமுக, தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி

இபிஎஸ் பங்கேற்கும் பிரசார கூட்டங்களில் தவெக கொடியுடன் சாரை சாரையாக சென்றனர். இதனால் அதிமுக, தவெக கூட்டணியில் இணைய உள்ளதாக பேச்சுகள் அடிபட்டன. மேலும் அதிமுக பிரசார கூட்டத்தில் தவெக கொடி பறந்த நிலையில், 'வலிமையான கூட்டணி அமைய உள்ளது. பிள்ளையார் சுழி போட்டாச்சு' என தவெக கொடியை பார்த்து இபிஎஸ் சொன்னது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

34
அதிமுகவுடன் சேர்வதே விஜய்க்கு பாதுகாப்பு

'அதிமுக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்' என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலர் பேசினார்கள். 'அதிமுகவுடன் சேர்ந்தால் தான் விஜய்க்கு பாதுகாப்பு. தனியாக இருந்தால் திமுக காலி செய்து விடும்' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதனால் அதிமுக, தவெக கூட்டணி உறுதி என கருத்துகள் பரவி வந்தது. ஆனால் இது தொடர்பாக விஜய்யோ, தவெகவின் மற்ற தலைவர்களோ கருத்துகள் ஏதும் தெரிவிக்கவில்லை.

இபிஎஸ் கனவை தகர்த்த தவெக

இந்நிலையில், இபிஎஸ் கனவில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக கூட்டணி குறித்து தவெக கருத்து தெரிவித்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தவெகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 'அதிமுக, தவெக கூட்டணி பேச்சு அடிபடுகிறதே' என செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

44
தவெக நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

இதற்கு பதில் அளித்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், ''ஒரு மாதத்துக்கு முன்பு (கரூர் சம்பத்துக்கு முன்பு) தவெக எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ, அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்தார். இது கூட்டணி கனவில் மிதந்தை இபிஎஸ்ஸையும், அதிமுகவினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கூட்டணி பேச்சுக்கு முற்றுப்புள்ளி

ஏனெனில் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று தொடர்ந்து கூறி வந்த விஜய், அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் விளக்கம் அளித்து இருந்தார். இப்போது சி.டி.ஆர்.நிர்மல்குமார் விஜய்யின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கூறியிருப்பதன் மூலம் தவெக, அதிமுக கூட்டணி பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories