மாநிலத்தில் 3 முக்கிய பெருந்துறைமுகங்கள் (சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்) மற்றும் 17 சிறுதுறைமுகங்கள், பல தொழிற்பூங்காக்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அங்கு சரக்கு ஏற்றுமதி, மீன்பிடி, கப்பல் கட்டுதல், மறுசுழற்சி, கடல்சார் சுற்றுலா போன்ற துறைகளில் தமிழ்நாட்டை முக்கிய மையமாக மாற்றியுள்ளன.
“ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வரும் நிலையில், கடல்சார் துறையின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.