தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார். இதை மனதில் வைத்தே, 'என்னை அசிங்கம் அசிங்கமாக பேசுகிறார்கள்' என விஜய் பேசியதாக கூறப்படுகிறது. பொதுவாக உணர்ச்சிகள், சென்டிமென்ட்கள் மக்களின் கவனத்தை விரைவாக ஈர்த்து விடும்.
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்
இதனால் அரசியலில் ஊறிப்போன சில தலைவர்கள் தொண்டர்கள் முன்பு, மக்கள் கண் கலங்குவது அவ்வப்போது நடந்து வரும். இன்று விஜய் 'தன்னை அனைவரும் அவதூறாக பேசுகிறார்கள்' என்று கூறியபடி கண் கலங்கியதை பார்த்த சிலர் முழு நேர அரசியல்வாதியாக மாறும் தகுதி விஜய்க்கு வந்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.