மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், செங்கோட்டையனை நீக்கியதற்காக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடினார். பழனிசாமியை துரோகத்தின் உருவம் என்றும் ஹிட்லர் போன்றவர் என்றும் விமர்சித்த அவர், தென் தமிழ்நாட்டில் இபிஎஸ் பெரிய தோல்வியை சந்திப்பார்.
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: அண்ணன் செங்கோட்டையன் 72ல் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் கட்சியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன். பசும்பொன்னில் தாங்களை சந்தித்தது அரசியல் ரீதியான நிகழ்ச்சி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைலி ஜெயலலிதா பசும்பொன் வரும்போது எல்லாம் செங்கோட்டையன் அம்மாவின் பாதுகாப்பிற்காக கட்சி சார்பாக அங்கு வருவார்.
25
குரங்கு கையில் சிக்கிய பூமாலை
அம்மாவின் அரசியல் சுற்றுப்பயணத்தின் பாதுகாப்பில் செங்கோட்டையன் முக்கிய பங்கு ஆற்றியவர். நாங்கள் மூவரும் சந்தித்ததை அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை. துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்றுதான் செங்கோட்டையன் சொன்னார். கங்காரு குட்டியை மடியில் கட்டிப்பிடித்தது இருப்பது போல எடப்பாடி பழனிச்சாமி பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல தற்போது கட்சியை சின்னா பின்னம் ஆக்கி வருகிறார்.
35
தைரியம் இல்லாத எடப்பாடி பழனிசாமி
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிசாமி வழி வகுக்கிறார். மற்றவர்களை பார்த்து துரோகி என கூறும் தகுதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொண்டது போல் எடப்பாடி செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். எங்களை நேரில் சந்திக்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடையாது. எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கிய சின்னம்மா சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய பழனிச்சாமி துரோகியா?
அவர் முதல்வராக அவருக்கு ஆதரவு வழங்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி துரோகியா? நாங்கள் துரோகியா. ஹிட்லர் போன்ற மனப்பான்மையில் உள்ள பழனிசாமி. துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். எங்களோடு ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜைக்கு வந்ததால் கட்சியிலிருந்து கொங்கு நாட்டு தங்கம் செங்கோட்டையன் அவர்களை கட்சியில் இருந்து நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிசாமிக்கு தென் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.
55
தென் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தோல்வி
தென் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். எங்களை bteam என்று சொல்லும் பழனிச்சாமி தான் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமானவர். இந்த தேர்தலில் பழனிச்சாமியின் துரோகம் வீழ்த்தப்படும். கொடைநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே பழனிச்சாமி பதறுவார். பதறுகிறார்.. அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது அழிவை சந்திப்பார்கள் கடைசியில் சூரசம்ஹாரம் நடக்கும். எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்கு நாங்கள் ஜனநாயக முறையில் எடுக்கப் போகும் ஆயுதத்தை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.