இதனால் சட்ட போராட்டம் நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பன்ருட்டி ராமசந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன்,
கே.சி.பழனிசாமி, பெங்களூர் புகழேந்தி, அன்வர் ராஜா என அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார்.