2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்தது. 2 இடத்தில் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளி செல்லப்பட்டது. இந்த நிலையில் எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தான் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை சந்தித்து பேசினேன்.
இயக்கம் வலிமை பெற வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தேவர் ஜெயந்தி கலந்து கொண்டதற்கு பரிசு தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். என்னை திமுகவின் பி டீம் என கூறுகிறார். தான் திமுகவின் பி டீம் இல்லை- எடப்பாடி பழனிசாமி தான் ஆ 1ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டப்படும் கொடநாடு கொலை வழக்கு திமுக அரசின் நடவடிக்கை எடுக்கவில்லை. கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.