கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தமிழக பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' செயல்படுத்தப்பட்டு வந்தது. தேர்தல் களத்தில் இந்த தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் எதிர்பாராத அரசியல் மாற்றங்களால் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.
ரூ.2,500 எப்போது கிடைக்கும்? பெண்கள் எதிர்பார்ப்பு
தவெக தனது தேர்தல் அறிக்கையில், இத்திட்டத்தை 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்ற பெயரில் மாற்றி, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. புதிய அரசு பொறுப்பேற்றதும் ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்று பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் தவெக அரசு ஆயிரம் ரூபாயை மட்டுமே பெண்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.