ஆனால், 2018-ல் பாஜகவுடன் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கே.சி.பி தெரிவித்த கருத்துக்கு எந்தவித விளக்கமும் கேட்காமல், கே.சி. பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கினீர்கள். கே.சி.பி.யை மீண்டும் கட்சியில் இணைக்க பல தலைவர்கள் பலமுறை முயற்சி எடுத்தும், உங்கள் சுயநலத்தாலும், பதவி வெறியாலும், காழ்ப்புணர்ச்சியாலும் இன்றுவரை அதைத் தவிர்த்தீர்கள். இதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி, கட்சியை இன்று இந்த நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். திமுக எதிர்ப்பு, லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சி, தொண்டர்களை அரவணைத்துச் செல்வது, சாதாரண தொண்டனுக்கும் பொறுப்புகள் வழங்குவது ஆகியவையே அதிமுகவின் பலங்கள்.