இந்நிலையில் சனிக்கிழமையான இன்று அதிமுகவை சேர்ந்த நடிகர் ரவி மரியா, ஜெ.எம். பஷீர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் இணைந்தனர். இவர்களை தவெகவை சேர்ந்த பொதுச்செயலாளர் ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார். அந்த வகையில் யாரும் எதிர்பாராத விதமாக திமுகவின் முக்கிய பிரமுகரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்து ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தவெகவில் இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.