AIADMK Vs TVK: நடப்பதை எல்லாம் பார்த்தால்! தமிழக பெண்களை தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் காப்பாற்றணும்! இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

Published : Jun 19, 2026, 08:15 AM IST

AIADMK: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், ஆளுங்கட்சி நிர்வாகிகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

PREV
15

திருவாரூர் டவுன் பகுதியை சேர்ந்த 27 வயதான இளம்பெண். உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தவர். நேற்று முன்தினம் இரவு பஸ்சில் புதிய பேருந்து நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக தந்தை வருகைக்காக காத்து இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 நபர்கள், தனியாக நின்ற அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனது தந்தையிடம் கூறி கதறி அழுததாக கூறப்படுகிறது.

Ration Card: ஜூன் 20-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்? மக்களே உடனே கடைக்கு போங்க!

25

இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் (எ) பிரவீன்குமார் (24), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் நாகப்பட்டினத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரில் 2வது ஆண்டு படித்து வரும் அசோக் (26) என தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

35

இந்நிலையில் கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் என இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை.

45

ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல! அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்?

Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?

55

9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா? இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories