இதன்மூலம் இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,30,69,831 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், பெண்களின் வாக்குகளை ஒன்று விடாமல் அள்ளுவதற்காக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி பொங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்
அதாவது பெண்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ''பொங்கல் அன்றோ அல்லது பொங்கல் முடிவதற்குள்ளோ பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தித்திப்பான செய்தியை அறிவிப்பார். பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை அரசு உயர்த்த முடிவு செய்துள்ளதையே பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என அமைச்சர் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.