கூட்டத்திற்கு விஜய் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தார்? தாமதத்திற்கு என்ன காரணம்?காவல்துறையிடம் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்று அனுமதி கோரப்பட்டது? ஆனால் உண்மையில் திரண்ட கூட்டம் எவ்வளவு? என பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளை (ஜனவரி 12) அதிகாரிகள் சிபிஐ விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக விஜய்க்கு கடந்த 6ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக
விசாரணைக்காக நாளை காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ முன்பு ஆஜராவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நாளை அதிகாலையில் டெல்லி புறப்பட்டு செல்வார் என கூறப்பட்டுள்ளது.
டெல்லி வரும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும்படி டெல்லி காவல்துறைக்கு தவெக சார்பில் இ மெயில் அனுப்பப்பட்டுள்ளது. விஜய்யை பார்க்க கூட்டம் கூடி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளை செய்யும்படி டெல்லி போலீசிடம் தவெக கேட்டுக் கொண்டுள்ளது.