மேலும், தமிழ்நாட்டின் மொத்தம் 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கும் இந்த மழை நிலை தொடரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.