சென்னையை பொறுத்தவரை சிறிய இடங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதி. இங்கு லட்சக்கணக்கான வாகனங்கள் சாலையில் செல்வதாலும், தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதாலும், அதிகமான ஏசி இயந்திரங்கள் செயல்படுவதாலும் வெப்பம் அதிகரித்தே காணப்படும். மிக முக்கியமாக கடல் காற்று அதிகமாக வீசுவதால் வெப்பம் அதிகரித்து குளிர் மிகக் குறைவாகவே இருக்கும்.
இன்று ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர்
ஆனால் இன்று சென்னையில் அதிசயமாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலை பிரதேசங்களிலும், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் பகல் நேரங்களிலும் கடும் குளிர் நிலவுவது வாடிக்கையான ஒன்று. ஆனால் சென்னையில் இன்று சூரியன் சுட்டெரிக்கும் மதிய நேரத்திலும் ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர் நிலவியது சென்னைவாசிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.