தாம்பரம் – கன்னியாகுமரி - செங்கல்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண்: 06133 / 06134) இயக்கப்படவுள்ளது. ரயில் எண் 06133 தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் கன்னியாகுமரிக்கு மறுநாள் மதியம் 1.25 மணிக்கு சென்று சேர்கிறது.
இதேபோல (எண் 06134) கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 17ஆம் தேதி மதியம் 3.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு
மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் 6 – தூங்கும் வகை, 12 – பொதுவகை, 2 – மாற்றுத் திறனாளி நட்பு இரண்டாம் வகை பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 15.10.2025 மதியம் 2.15 மணி முதல் தொடங்கும் எனவும், ரயில் எண் 06100 க்கு முன்பதிவு 16.10.2025 காலை 8.00 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.