ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என பிளவுப்பட்டுள்ளது. அதே நேரம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் வசம் கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 9 வருடங்களாக தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வி மேல் தோல்வி கிடைத்து வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். பிரிந்து சென்ற தலைவர்களை இணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என கூறி வருகிறார்கள்.