கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்து
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம். கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 260 பேருந்துகளும், செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர், ஓசூர், திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.