டிசம்பர் மாத தரிசன டிக்கெட்
இந்தநிலையில் திருப்பதி கோயிலுக்கு செல்ல நாள் தோறும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு திருப்பதிக்கு சென்று வரும் வகையில் 3 மாதங்களுக்கு முன்பு இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் இலவச சர்வ தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், கட்டண தரிசனம் என பல்வேறு தரிசனங்களையும் திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை, சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஆன்லைன் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதே போல சேவைகள், தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவற்றிற்கான முன்பதிவுகளும் நிறைவடைந்து விட்டன.