இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில். அப்பள்ளி மாணவிகள் சிலர், ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்கள் நடப்பதாக வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.