இதுகுறித்து, கல்வியாளர்கள் சிலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2025, ஜூன் 13ம் தேதி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மே மாதம் பணி நீட்டிப்பு செய்ய வேண்டாமென, செயல்முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதியிழப்பை தவிர்க்க கொண்டு வந்த அரசாணை விதிமுறைகளை செயல்படுத்த, மூன்று ஆண்டுகள் கால தாமதமாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது அரசாணையை அமல்படுத்துவதில், ஆசிரியர்களுக்கு நிலவிய சந்தேகங்கள் அடிப்படையில், அரசிடம் விளக்கம் பெற சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 30.5.2025ல் விளக்கம் பெறப்பட்டதால், செயல்முறைகள் சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பப்பட்டன என்றார்.