பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றம் உத்தரவுப்படி 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கருக்கு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.