ஆனால் இந்த இரண்டாவது திருமணம், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. சுசீலாவுடன் அவரது உறவு, கிளினிக் காலத்தில் தொடங்கி, நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் மக்களிடம் இரட்டை வேடம் போட்டதாக பல்வேறூ தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். அதே வேளையில் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்று ராமதாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
புகைப்படம் எப்படி கசிந்தது?
இந்நிலையில், ராமதாசும், சுசீலாவும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அனைத்து செல்போன்களும் பிடுங்கி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த புகைப்படம் எப்படி கசிந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஹோட்டலில் தான் இந்த நிகழ்வு நடந்தது. சுமார் 200 பேர் விழாவில் பங்கேற்றிருந்தனர். அந்த விழாவை முன்னின்று நடத்தியவர் பாமக எம்.எல்.ஏ அருள். இந்த விழா குறித்து கேள்விப்பட்டதும் இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கருதி ஜிகே மணி ஒதுங்கி சென்று உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.