இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 1ஆம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்தவும் அந்த அந்த மாவட்டங்களில் தலைமை நிர்வாகம் சார்பில் கலந்து கொள்பவர்களின் பட்டியலையும் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணி கலந்து கொள்வார் எனவும், கடலூரில் பாமக செயல் தலைவர் ஶ்ரீகாந்தி பரசுராமன், அரியலூரில் பு.த. அருள்மொழி, திருவண்ணாமலையில் தீரன், விழுப்புரத்தில் முரளி சங்கர், தஞ்சாவூர் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட 37 மாவட்டங்களுக்கு பங்கேற்கும் நிர்வாகிகள் அறிவித்துள்ளார்.