அதன் பின்னர் ரஜினிகாந்த், இளையராஜாவை பற்றி பேசும் போது... "புராணங்களில் அதிசய மனிதர்களை பார்த்துள்ளேன். ஆனால், நான் கண்ணால் கண்ட அதிசய மனிதர் இளையராஜா தான் . அவரை பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டே இருக்கலாம். 1970,80ம் ஆண்டுகளில் அவர் போட்ட பாடல்கள் இப்போது படங்களில் பயன்படுத்தினாலும் செம ஹிட்டாகி விடும். ஒரு 1,600 பாடங்கள், 800 படங்கள், 1,500 பாடல்களை பாடியுள்ளார். 50 வருடம் என்பது சாதாரண விஷயமே இல்லை? விஜயகாந்த், முரளி, கமல், மோகன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்துள்ளார். அனைவருக்கும் ஒரே மாதிரியான இசையை தான் போடுகிறேன் என இளையாராஜா சொல்வார். ஆனால், அதில் உண்மையில்லை. கமல்ஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்டிரா... என தேவர்மகன் படத்தின் பாடலை சுட்டி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.