கரூர் துயர சம்பவம்..
புதிதாக கட்சி தொடங்கிய தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு அதனை நிறைவேற்றினார். திருச்சி, அரியலூர், நாமக்கல்லைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடத்தப்பட்ட இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.