ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திமுக இளைஞர் அணி நிர்வாகி மீது பாலியல் புகார் அளித்துள்ளார். தன்னைப் போலவே மேலும் 20 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ள நிலையில், போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வசெயல் தன்னை திருமணம் செய்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், அமைச்சர்களின் உதவியாளர்களோடு தன்னை ஒன்றாக இருக்கும் படி மிரட்டுவதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் தன்னை போல் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியிருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக இளைஞர் அணி பொறுப்பில் இருந்து தெய்வசெயல் நீக்கப்பட்டுள்ளார்.
26
அதிமுக போராட்டம்- திமுக நிர்வாகி பதவி பறிப்பு
இந்த நிலையில் இளம்பெண் புகார் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசெயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக காலதாமதமாகவும், சில அரசியல் கட்சியினரிடம் அப்பெண் சென்று முறையிட்டதாலும் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு மாறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
36
இளம்பெண் புகார் - போலீசார் விளக்கம்
இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 10.05.2025 அன்றே அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்பெண், தெய்வச்செயல் என்பவரை கடந்த 31.01.2025-ம் தேதி எவ்வித நிர்பந்தமுமின்றி திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததும் தெரிய வருகிறது
இதனிடையே தன்னை போன்ற 20 வயதுள்ள 20 பெண்கள் தெய்வசெயல் என்பவரது கொடூர பிடியில் சிக்கி உள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார் என சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர், தான் அளித்த வெவ்வேறு புகார்களில் தன்னை போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றுக்கொன்று பொறுத்தமற்ற தகவல்களை தெரிவித்துள்ளதோடு, அப்பெண்களைப் பற்றிய எவ்வித தகவல்களையோ, முகாந்திரத்தையோ விசாரணையின்போது தெரிவிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
56
உண்மைக்கு மாறான தகவல்- போலீஸ்
அரசியல் பிரமுகரின் உதவியாளர் ஒருவருக்கு மனுதாரரை இரையாக்க முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளது உண்மைக்கு மாறானது; மனுதாரர் கொடுத்த புகார்களில் இதுபோன்ற தகவல் எதையும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. மனுதாரர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இது சம்மந்தமாக மனுதாரர் கொடுத்த வெவ்வேறு புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 19.05.2025 அன்று மனுதாரரிடம் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரணை செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய அனைத்து வழிமுறைகள் மற்றும்
66
சட்ட ரீதியாக நடவடிக்கை - போலீஸ்
சுற்றறிக்கைகளில் உள்ள அறிவுறுத்தல்களின் படி அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வழக்கில் காவல்துறை சார்பில் மனுதாரருக்கு முதல் தகவல் அறிக்கை நகலினை கொடுத்தும் மனுதாரர் அதனை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.