PMK Leader Vasu Murder Case: செங்கல்பட்டு மாவட்ட பாமக துணைச் செயலாளர் வாசு, இளந்தோப்பு பகுதியில் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியை சேர்ந்த ராமதாஸின் தீவிர ஆதரவாளரும், பாமக முக்கிய நிர்வாகியான ம.க. ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25
பாமக பிரமுகர் வாசு
செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வாசு. பாமகவில் செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். மேலும், காட்டாங்குளத்தூர் ஒன்றிய சேர்மனாக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். அரசியலை தவிர, தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிங் சேவைகளை வழங்குவது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநூர் சப்ளை செய்து வந்துள்ளார்.
35
கொலை
இந்நிலையில், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, இளந்தோப்பு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே வாசு தனது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அங்கிருந்த கற்களை எடுத்து வாசு உள்ளிட்ட 3 பேர் மீது சரமாரியாக வீசி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மூன்று பேரும் அங்கிருந்து ஓட தொடங்கினர். ஆனால் வாசுவை மட்டும் விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளரும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான ஏ.வாசு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
55
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு
இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாசு அப்பகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். பட்ரவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பனியாற்றியுள்ளார். இந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க ஒருவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடுகிறது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏ.வாசுவின் படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஏ.வாசுவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.