தமிழகத்தில் வெயில் கொளுத்தப்போகுது.! 3 டிகிரி வரை அதிகரிக்கும் - வானிலை மையம் அலர்ட்

Published : Sep 12, 2024, 04:23 PM IST

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
தமிழகத்தில் வெயில் கொளுத்தப்போகுது.! 3 டிகிரி வரை அதிகரிக்கும் - வானிலை மையம் அலர்ட்
rain kerala

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. தற்போது மழையானது பெரும் அளவில் குறைந்துவிட்டது. மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை (12.09.2024 மற்றும் 13.09.2024)  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதே போல 14.09.2024 முதல் 18.09.2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

25

உக்கிரமாகும் வெயில்

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (12.09.2024 மற்றும் 13.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2"-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது. 
 

35

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

AADHAAR : ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா.! கவலை வேண்டாம்- டிசம்பர் 14ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
 

45

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

நாளை (13.09.2024) மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.09.2024 முதல் 16.09.2024 வரை; மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

55

வங்கக்கடல் பகுதிகள்:

13.09.2024 முதல் 15.09.2024 வரை; தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.09.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

 

Read more Photos on
click me!

Recommended Stories