மேற்கண்ட கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன்பெற கடன் வழங்கும் முகாம்கள் நாளை மற்றும் செப்டம்பர் 20, 30 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெறுகிறது. அல்லிநகரத்தில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், போடியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உத்தமபாளையம் நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடக்கிறது.