TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! என்னென்னு தெரியுமா?

Published : Sep 12, 2024, 10:57 AM IST

TNPSC Group 4 Exam: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த காலிப்பணியிடங்கள் 6,704 ஆக உயர்ந்துள்ளன. தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
15
TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! என்னென்னு தெரியுமா?
TNPSC

எப்படியாவது அரசு பணியில் சேர்ந்து விட வேண்டும் பல இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இதற்காக இளைஞர்கள் துவண்டு விடாமல் விடாமுயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதை அடுத்து அரசு ஊழியர்களை தேர்வு செய்யும் முறையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

25
TNPSC Group 4 Exam

அதன்படி டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இதில், குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு என பல நிலைகளில் தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி 30ம் தேதி வெளியாகி, ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் 28ம் தேதி வரை பெறப்பட்டது. 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.

35
TNPSC Group 4 2024

அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதியதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வுகளை பொறுத்த வரை நேர்முகத்தேர்வு இல்லை. இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆஃப் மதிப்பெண்ணை பெற்றால் ஆவண சரிபார்ப்புக்கு பின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

45
TNPSC Group 4 Exam Result

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பொறுப்பேற் பிறகு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் இருக்கும் கால தாமதத்தை குறைப்போம் என உறுதியளித்தார். இதனையடுத்து குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

55
TNPSC Group 4 Additional Vacancies

அதில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,244லிருந்து 6704ஆக உயர்ந்துள்ளது. இளநிலை உதவியாளர் - 128, தட்டச்சர் - 14, சுருக்கெழுத்து தட்டச்சர் - 15, கேஷியர் - 1, உதவியாளர் – 3, இளநிலை கணக்கு உதவியாளர் – 8, வனக் காப்பாளர் – 30, வனவர் – 40, பில் கலெக்டர் – 47, உதவி விற்பனையாளர் - 194 ஆகிய பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை டிஎன்பிஎஸ்சி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் கட் ஆப் மதிப்பெண்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories