தொடர் விடுமுறை அறிவிப்பு வெளியாகுமா.?
அதன்படி, செப்டம்பர் 28ம் முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி எனவே இந்த காலாண்டு விடுமுறையைய பொறுத்த வரை 3 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தநிலையில் காலாண்டு விடுமுறை கிடைக்காவிட்டால் என்ன தொடர்ந்து 4 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் படி செப்டம்பர் 14ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அரசு விடுமுறை, செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை, செப்டம்பர் 16ஆம் தேதி திங்கட் கிழமை மட்டும் பள்ளிகள் செயல்படும். செப்டம்பர் 17ஆம் தேதி மிலாது நபி அரசு விடுமுறை. இந்தநிலையில் ஏராளமான மக்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கும் சுற்றுலாவிற்கும் பயணத்தை தொடங்கியுள்ளனர்.