தவெக தலைவர் விஜய் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை தொடர்ந்து மதுரையில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக 2வது மாநாட்டை நாளை நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வாகன நிறுத்துவதற்காக 3 பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.