இந்த சாலை சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களையும், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், கொச்சி போன்ற நகரங்களையும் இணைக்கும் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து இணைப்பாக உள்ளது. செங்கப்பள்ளி–கோவை இடையேயான 54 கி.மீ. பகுதி ஏற்கனவே ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் சேலம் வரை உள்ள பகுதி இன்னும் நான்கு வழித்தடமாக வருவதால், போக்குவரத்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.