மீண்டு்ம் அரசியல் களத்தில் தமிழிசை
இதனையடுத்து தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளதாகவும், திமுகவிற்கு எதிராக தனது அரசியல் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார். மேலும் தன்னை பரட்டை என நெட்டிசன்கள் விமர்சித்து வருவதாகவும் கூறிய அவர், தான் ஆளுநர் பதவியை விட்டு வந்து தோல்வி அடைந்தது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை,
உங்களுக்கு ஏன் இந்த கவலை என அரசியல் கட்சி இணையதளவாசிகளை விமர்சித்தார். தொடர்ந்து பாஜகவின் வார் ரூம் தரப்பினரையும் விமர்சித்து அவர், பாஜக தலைவர்கள் கருத்து கூறினால் பதிவிடுங்கள், அதை விடுத்து தவறாக எழுதுவது ஏற்க முடியாது என தெரிவித்தார்.