முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் உசிலப்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்: பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தாய்க்கழகமான திமுகவில் இணைவது மகிழ்ச்சி. திமுகவில் தொண்டனாகத்தான் இன்று இணைந்திருக்கிறேன்.