குற்றாலமும் சாரல் மழையும்
குற்றாலம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இயற்கை, இயற்கையை சார்ந்த அருவிகள், இதமான சாரல் காற்று, இதனை ரசிக்கவே பல மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல பல வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.
அருவிகளில் இருந்து கொட்டும் மூலிகை தண்ணீர் புத்துணர்ச்சியை கொடுக்கும். அந்த அளவிற்கு இயற்கை சார்ந்த இடம் தான் குற்றாலம். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக வறண்டு காணப்படுகிறது.