இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில்15 ஆண்டுகளாக, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதாவது பாரதி போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்: ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி என பல்வேறு இடங்களில், ஓடும் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை திருடி உள்ளேன். நல்லவள் போல குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளேன்.