இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவு இப்போது இருந்து தொடங்கி இருக்கிறது. இந்த ரயில் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூருக்கும், குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்புத்தூரில் இந்த புறப்பட்டு சென்னைக்கும் வந்தடைகிறது என்றாலும் கூட, இடையில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கூடலூர் மற்றும் கோவை ஆகிய ஊர்கள் வழியாக இந்த ரயில் பயணிப்பதால் இந்த ஊர்களில் உள்ள அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் இந்த சிறப்பு ரயிலானது மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8:10க்கு கோவைக்கு சென்றடைகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை கோவையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டும் அந்த ரயில் தாம்பரத்திற்கு அடுத்த நாள் மதியம் 12:30 மணிக்கு வந்து சேர்கிறது.
Yogi Babu Video: புதிய வேடத்தில் களவானிகள்; வீடியோ வெளியிட்ட யோகி பாபு - போலீஸ் எச்சரிக்கை!